
Monday, 28 December 2009
Thursday, 24 December 2009
நடந்தது நன்றாகவே நடந்தது......
இடி இடித்தது என் உச்சந்தலையில்
வெட்டியாய் திரியும் காலிப்பயல்களை நினைத்து.....
வெண்சட்டை உடுத்தி அவள் சென்றபோது
ஆசைபட்டேன் அவள் கழுத்துபட்டியாக.......
தம்பர் மண்டபத்தில் இருந்து எட்டி பார்த்தபோது
தேவதையின் தரிசனம் கிடைக்காததால்
தம்மடிக்க தொடங்கினேன் தனிமையில்..
"பிக் மச்" இட்காவது வந்திருப்பாள் என்று
சற்றே எட்டி பார்த்த போது....
பத்திரிசியார் மைதானத்தில் அவளை...
கண்டதாக சிலர் கூறினார்,,,,,
உனை நினைத்த நேரத்தில்.............
உனக்காக களித்த பொழுதில்...........
எனக்காக எத்தனையோ கருமங்களை
ஆற்றியிருந்தால்...எதாவது நடந்திருக்கும்...
நல்லது........................
நடந்தது நன்றாகவே நடந்தது......
கஸ்ரோ...........
Sunday, 29 November 2009
பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும் பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும் ........
இதுதாண்டா உன் ஜோடின்னு மனசு சொல்லணும்
இதயத்தில் ஏறி உட்கார்ந்து எனை இம்சிக்கணும்
தூக்கம்கெட்டு அவள் நினைவுகள் எனை வறுதெடுக்கணும்
அவள் நினைவோடேயே மனசு அலையணும்
மறுபடி எப்போ பார்ப்பேன்னு எம்மனசு தவிக்கனும்
இந்த சின்ன ஆசைகள் எல்லாம் ஒரு பொழுது
கேள்விகளையும் பதில் அற்றவைகளாகவும் இருந்தன.....
முதற் பார்வையிலேயே பிடித்தது
உன் ஜோடின்னு மனசு சொன்னது
உன் நினைவுகள் எனை இம்சித்தன
அலை பாய்ந்த என் மனசு
உன்னை நினைத்து தினமும் ஏங்கியது
உன்னை பார்த்த பின்பு இவை எல்லாம் நிகழ்ந்தது
thodarum..
Saturday, 21 November 2009
ஒரு சந்திப்பு...........
இனியவை, உங்கள் மனதிற்கு இனியவை நினைக்க நினைக்க இக்கணமும் இனிப்பவை, எண்ணும் போதெல்லாம் மனதில் ஒரு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உண்டு பண்ணுபவை எவை என்று கேட்டால் ஓராயிரம் காரணங்களை சுட்டிக்காட்டுவீர்கள் முதற் காதல் தொடக்கி முதலிரவு வரைக்கும் அசை போடுவீர்கள்... ஆனால் பிரிந்து சென்ற நண்பர்களின் தொடர்பு, உருவம் மாறுகின்ற வயதில் பிரிக்கப்பட்டு ஆள் அடையாளமே 100 வீதம் மாறி போயிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் 14 வருடங்கள் கழித்து அந்நிய மண் ஒன்றில் என்னை அடையாளம் கண்டு ஆரத்தழுவிய அந்த கணப்பொழுது என்னை கண்டு கொண்ட போது அவன் அடைந்த ஆனந்தம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களை ஒன்றாகி விட்டது... ஆயிரத்து தொள்ளயிரத்து தொண்ணூற்று ஐந்து ஜப்பசி பிரிந்த நாங்கள் 2009 நவம்பர் இல் சந்தித்தோம் ... அந்த நண்பனின் பெயர் கோகிலன் ..........................
Monday, 16 November 2009
Saturday, 14 November 2009
வந்தேன் உனக்காக
பால் பழமும் கொண்டு வந்தேன்
இன்னிசை கீதம் இசைத்து வந்தேன்
கஸ்ரோ
Saturday, 7 November 2009
Saturday, 31 October 2009
என்றார்கள்
கல்லுக்குள்ளே ஈரம் உண்டு என்றார்கள்
அது கசிவதும் கூட உண்டு என்றும் சொன்னார்கள்
கல்லை விட கடினமனத உன் மனசு
அதை எண்ணி கசிகிறதே என் இதய குருதி
காரிருள் கானகத்தில் கூட சிற்சில நேரம்
விட்டில்கள் நொடிப்பொழுது வெளிச்சம் தரும்
காதல் எனும் பறவை இருளுக்குள் போன போது
நம்பிக்கை சுடராய்எதுவுமில்லை எனக்கிங்கு....
கஸ்ரோ
உப்பின் சுவை
உப்பும் முத்தும் ஒரே வகையான ஒலிச்சுவை
கண்ணீர் துளி உப்பின் சுவையுடையதே.........
முத்தை அதன் சுவையை அறியாத நான்....
உப்பின் சுவையை தினமும் உணருகின்றேன்
கஸ்ரோ
Saturday, 24 October 2009
காம் சொல்கிறார்கள் பலர்.... இல்லையே..............
எனக்கும் உனக்கும் ஒன்றாகத்தானே இருந்தது.....
சின்ன வயசில் காதல் பீலிங்க்ஸ் ..........
சேலத்து மாங்காய் என்றால் பீலிங்க்ஸ்......
இறால் கறி என்றால் இறக்கை கட்டும்........
வெண்டிக்காய் என்றால் தூர ஓடுவோம்
பீலிங்க்ஸ்பள்ளி செல்லும் நேரம் ஒன்று.....
பார்வைகள் பரிமாறும் கணங்கள் ஒன்று.....
காதல் தெரியாத வயசில் காதலித்த
பீலிங்க்ஸ்நம்பவில்லை நானும் அப்போ........
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்....
என்ற பீலிங்க்ஸ் ஆனா வார்த்தையினை....
கடைசி பையன் பால் குடிக்கவில்லையே....
மூத்தவன் சொல் பேச்சு கேட்கிறான்
இல்லையேஐயோ...அவரை இன்னமும் காணவில்லையே.....
உன் பீலிங்க்ஸ்..தனிமை..தவிப்பு..இயலாமை.. என் பீலிங்க்ஸ்...
தோற்று போனது... என் பீலிங்க்ஸ் பற்றிய பீலிங்க்.......
கஸ்ரோ
Wednesday, 7 October 2009
காதலிக்காதீர்கள்......
அது வெற்று தாளில்
நீங்கள் கனவுடன் எழுதும்
உங்கள் கவிதை போல்
அழகாக இருக்காது.....................
கஸ்ரோ
Tuesday, 6 October 2009
அந்த கணப்பொழுது...?
Wednesday, 23 September 2009
வேதனையின் சோகம்
முதல்பார்வை .......
உன் திருமணத்திற்கு பின்னான உன் வாழ்விற்கும் தனித்து விடப்பட்டதிட்கு பின்னான என் வாழ்விற்கும் பல நிலைகள் உண்டு இப்போ... நாம் இருவரும் காதலித்த போதும் நான் இப்போதும் உன்னை காதலிக்கின்ற போதும் பல நிலைகள் உண்டு..... ஆனாலும் நிலையான ஒரு நிலை நிரந்தரமாய் உள்ளது.. அது நிரந்தரமாய் எப்போதும் இருக்கும் அது எனை நோக்கிய உந்தனது
முதல்பார்வை .......
கஸ்ரோ.....
Saturday, 12 September 2009
என்னவளே...............
வாங்கி வருவாய் என காத்திருந்தேன்
காலங்கள் கழிந்ததே தவிர
கன்னியுன்னை காணவில்லை...
வந்தாய் எனக்காக மாலையுடன்...
அது என் கல்லறைக்கே அர்ப்பனமகியது
கஸ்ரோ
Tuesday, 1 September 2009
மறக்க முடியுமா...? அந்த நாட்களை....
மறக்க முடியுமா...? அந்த நாட்களை....
மறக்க முடியுமா...? அந்த நாட்களை....
மத்தியத்து நண்பர்கள்.....
கல்வியினை தவிரஏனைய அனைத்தையும்
கற்க சென்ற நாட்கள்..
மத்திய தாயின் மடியில்
புரண்டு விளையாடிய அந்த நாட்கள்
பள்ளி ஆசிரியர்களிடம் படிக்க மறுத்து
பல பாடம் படித்த நாட்கள்..........
இப்போ நினைத்தால் கவலை வருகின்றது
அறிவற்ற நிலையில் ஆசிரியர்களுடன்
அடிதடிக்கு சென்ற நாட்கள்
இப்போ புரிகின்றது..
ஆசிரியர்கள் அடாவடி செய்தாலும்
அடங்கி போக வேண்டுமென்று
இப்போ நன்றாக புரிகின்றது..
வேம்படி பிள்ளைகளுக்கு பின்னால் சென்றது....
சுண்டிகுளிக்கு பின்னால் சுற்றி திரிந்தது...
நண்பனுக்கு உதவி..நட்பிற்கு உதவி... என்று...
நாய் மாதிரி.. நாலாபக்கமும் நடமாடியது...
மூலையில் இருந்த என்னை
முன்னிலைப் படித்தி விட்ட
பிரேம்குமார் மிஸ்.......
தட்டிகொடுத்து நிமிர வைத்த....
ஓங்கார மூர்த்தி சேர்..........
ஜெயக்குமார் சேர்......
நன்றாக இருப்பாய் என நன் மனதோடு(/??) வாழ்த்தும்
ஜெயசீலன் சேர்......
வம்பு வரதன்...
சகுனி சந்திரகுமார்....
மறக்கமுடியுமா???
மத்தியத்து நினைவுகளை.....
முனியப்பரில் களித்த பொழுதுகள்...
சண்டைகளுடன் கூடியே வாழ்ந்தாலும்
நட்புடன்வாழ்ந்த நிமிடங்கள்
போர்ஸ்டார் இற்காக போராடிய பொழுதுகள்
சாதனை கழகத்தில் இருந்த
சந்தோஷமான காலங்கள்மறக்க முடியுமா?
நண்பர்கள் தம்பிகள் என களித்தகனாக் காலங்கள்....
பிரதாப் கமி கீதா கர்சன் சுகந்தன் சுசந்தன்
மகிந்தன் கிறிஸ்டி கிச்சான் கிரி சிவா
வெடி ஜெயதாஸ் மயூ ரீகன் அரவிந்தன்
அபிசேகன் மற்றும் பலர் மறக்க முடியுமா...?
கஸ்ரோ
Sunday, 30 August 2009
உரிமை......
யார் மனசில யாரு?
யார் மனசில யாரு?
என் மனசுல நீ
உன் மனசுல நான்
எம் இருவரின் மனசிலும்
நம் எதிகாலம்--அது அப்போ....
இப்போ உன் மனசில
உன் கணவன்,பிள்ளைகள்.
நீயும் என் காதலும்...
என் மனசில் இப்போதும்.....
நிரந்தரமாய்.........
கஸ்ரோ
Saturday, 29 August 2009
மோசமான நிமிடம்.......
எனக்கொரு கல்லறை வேண்டும்

எனக்கொரு கல்லறை வேண்டும்
யாரவது அமைத்து தாருங்கள்
வேதனைகளை தாங்கிய பொழுதுகள்
சோதனைகளை கொண்ட வாழ்க்கை
தோல்விகள் அனுபவித்த கணங்கள்
ஏமாற்றங்களாய் அமைந்த நிமிடங்கள்
துரோகங்களையே சந்தித்த என் மனது
வந்த வேகத்தில் திரும்பிய உறவுகள்
காற்றாகி போன பாசாங்கு வார்த்தைகள்
வெறுமையாகி போன எனது காதல்
கண்ணீராய் போன எனது கடந்த காலங்கள்
இவைகள் எல்லாம் புதைக்கப்படவேண்டும்
எனவே எனக்கொரு கல்லறை வேண்டும்.....
யாராவது அமைத்து தாருங்கள்.............
கஸ்ரோ
எப்படி இது நியாயம் அன்பே.........?
காதல் எனும் மைதானத்தில்
களிப்புடன் விளையாடவே கனவு கண்டேன்
நானும் நீயுமே வீரர்களாய் இங்கு
நடுவர் ஏதும் நமக்கில்லை எங்கும்
தவறாய் ஆட்டத்தை ஆடியதும் நீதான்...
தடுத்து நிறுத்தி போதும் என்ற என்னை
உதைத்து வீழ்த்தியதும் நீதான்...
அன்பே..................
சிவப்பு அட்டை காட்டியதும் நீதான்
எப்படி இது நியாயம் .................??
மேன்முறையீட்டு மனுவும் செய்தேன்
நீதியின்றி உன்னால் நிராகரிக்கவும் பட்டேன்
நடுவர் பார்வையாளர் அற்ற மைதானத்தில்
மூன்றாம் நடுவரையும் நீதான்...
எப்படி இது நியாயம் அன்பே.........?
கஸ்ரோ
Friday, 28 August 2009
25 விரல்களுடன் காணப்படும் அதிசய சிறுவன்
கொடைக்கானல் அருகே 25 விரல்களுடன் ஒரு அதிசய சிறுவன் உள்ளான்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை மலை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு சரவணன்(5), ஆறுமுகம்(3) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆறுமுகத்திற்கு முன்பு இரண்டு ஆண் குறிகள் இருந்தன. அதேபோல கைகளிலும், கால்களிலும் மொத்தம் 25 விரல்களு உள்ளன.ஆறுமுகத்திற்கு ஒரு வயதாகும் போது அவனுக்கு இருந்த ஒரு ஆண்குறி டாக்டர்கள் உதவியுடன் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.தற்போது சிறுவனுக்கு, இடது காலில் 7 விரல்கள், வலது காலில் 6 விரல்கள், கைகளில் தலா 6 விரல்கள் என 25 விரல்கள் உள்ளன. இது போன்று கோடிகளில் ஒருவருக்கு இருப்பது கூட அரிது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.





