Pages

Monday 22 March 2010

ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!


ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்

Friday 19 March 2010

மீண்டும் நாளைக்கு......

கல்லூரி செல்லும் வேளை..


வேம்படி வீதியில் அன்னநடை

பழகும் என் சைக்கிள்- உன்பொருட்டு..

வருவாயோ வரமாட்டாயோ..?

கூடவே உன் தங்கை வருவாளா?

வயது போன நேரத்தில் கூட

காவல் பார்க்க உங்கப்பர் வருவாரா..?

பத்தாம் கிளாஸ் படிக்கும் போதும்

பத்தி இல்லா கேள்விகள்... பதிலளிக்க

பிரேம்குமார் மிஸ் ஆல் கூட முடியாது..

தலை குனிந்து வரும் என் தேவதை

தனியாய் நடந்து வருவதும் அழகுதான்..

பூவுக்குள் நாகம் போல ஆபத்தனதும்தான்

ஏனெனில் அப்பன் வருவான் பின்னால்

வேம்படிக்கு திரும்புகையில்....

புன்னகையுடன் கூடிய ஓரப்பார்வை

அது ஆயிரம் கதை கூறுமே.......

கல்லூரி முடியுமட்டும் இருப்பு கொள்ளாது

பாடங்களையும் சரிவர கவனிக்காது

மீண்டும் என் தேவதையின்

பின்னால் அன்னநடை

குறித்த வீதி வந்ததும்

மீண்டுமொரு ஓரப்பார்வை

போதும் எனக்கு.. அன்றைய பொழுதுக்கு..

மீண்டும் நாளைக்கு......

என்பயணம் அவள் பின்னால் தொடரும்...

Thursday 18 March 2010

உன்னால் கிடைத்த பதில் சரிதானா?

வாசம் வீசும் நம் உறவுக்குள்


வேசமின்றி நாசவேலை செய்தது யார்?

பாசம் வைத்து சிலர் பழகி

மோசம் செய்ததும் சரிதானா?

மறைவு எதுவும் எமக்கில்லை என்று

இறுமாந்திருந்த எனக்கு

உன்னால் கிடைத்த பதில் சரிதானா?

வாழ்வில் ஒரு தடவை.

நிகழும் மகிழ்வான நிகழ்வு பற்றி

எனக்கு சொல்ல மறந்ததும் சரிதானா?

உயிர்த்தோழன் என்று உரக்க

நான் கூறியது வலுவிழந்து போனதே....

நம்மை பிரிக்க பலர் நினைத்த போது

பிழறாமல் நின்றவனே- இன்று

தொலைதூரத்தில் நான் இருக்க

மனு ஏதும் கொடுக்காமல்

பிரிவெளுதியது நியாயம் தானா?

கண்களில் கண்ணீர் அருவியென பாய

வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக

கோபம் தணித்து உனை எதிர்பார்த்து

சோகத்தோடு காத்திருக்கின்றேன்





கஸ்ரோ

Saturday 23 January 2010

என்றும் அழிக்கப்போவதில்லை

நீ வர மாட்டாய் என்று தெரிந்தும்,



எனக்கான உன் இதயம்


இடம் மாறிசென்றது தெளிவாக தெரிந்தும்....


இதயத்தில் எழுதிய உன்னை






என்றும் அழிக்கப்போவதில்லை...............


.


காதல்????????????????????????/

காதல் எனும் வான வெளி


மப்பும் மந்தாரமுமாய் இருந்து

வசந்தம் கொண்டாடிய கணங்களில்

கையில் ஒரு குட்டி பொம்மையுடன்

மனதில் என்னையும் கொண்டு உறங்கினாய்

காதல் எனும் வானவெளி

வரட்சியில் வாடி வதங்கிய போது

அருகில் மூன்று உயிர் பொம்மைகளுடன்

நீ ஆனந்தமாக உறங்குகின்றாய்.....

உன் மனசில்,,

Friday 15 January 2010

நட்புகள்

ஆண்டுகள் சில சென்றால்

அன்பான முகங்கள் மறக்குமோ....

நாடு விட்டு நாடு சென்றால்

நட்புகள் தான் பிரிவெழுதுமோ....

நம்பிக்கையின் அஸ்திவாரங்கள்-இன்று

ஆட்டம் காணுமோ.......?நான் செய்த பிழை எதுவோ....

எனக்கெதுவும் புரியலையே...!!!

K.P.castro