வாசம் வீசும் நம் உறவுக்குள்
வேசமின்றி நாசவேலை செய்தது யார்?
பாசம் வைத்து சிலர் பழகி
மோசம் செய்ததும் சரிதானா?
மறைவு எதுவும் எமக்கில்லை என்று
இறுமாந்திருந்த எனக்கு
உன்னால் கிடைத்த பதில் சரிதானா?
வாழ்வில் ஒரு தடவை.
நிகழும் மகிழ்வான நிகழ்வு பற்றி
எனக்கு சொல்ல மறந்ததும் சரிதானா?
உயிர்த்தோழன் என்று உரக்க
நான் கூறியது வலுவிழந்து போனதே....
நம்மை பிரிக்க பலர் நினைத்த போது
பிழறாமல் நின்றவனே- இன்று
தொலைதூரத்தில் நான் இருக்க
மனு ஏதும் கொடுக்காமல்
பிரிவெளுதியது நியாயம் தானா?
கண்களில் கண்ணீர் அருவியென பாய
வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக
கோபம் தணித்து உனை எதிர்பார்த்து
சோகத்தோடு காத்திருக்கின்றேன்
கஸ்ரோ
-
No comments:
Post a Comment