Pages

Monday 22 March 2010

ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!


ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்

Friday 19 March 2010

மீண்டும் நாளைக்கு......

கல்லூரி செல்லும் வேளை..


வேம்படி வீதியில் அன்னநடை

பழகும் என் சைக்கிள்- உன்பொருட்டு..

வருவாயோ வரமாட்டாயோ..?

கூடவே உன் தங்கை வருவாளா?

வயது போன நேரத்தில் கூட

காவல் பார்க்க உங்கப்பர் வருவாரா..?

பத்தாம் கிளாஸ் படிக்கும் போதும்

பத்தி இல்லா கேள்விகள்... பதிலளிக்க

பிரேம்குமார் மிஸ் ஆல் கூட முடியாது..

தலை குனிந்து வரும் என் தேவதை

தனியாய் நடந்து வருவதும் அழகுதான்..

பூவுக்குள் நாகம் போல ஆபத்தனதும்தான்

ஏனெனில் அப்பன் வருவான் பின்னால்

வேம்படிக்கு திரும்புகையில்....

புன்னகையுடன் கூடிய ஓரப்பார்வை

அது ஆயிரம் கதை கூறுமே.......

கல்லூரி முடியுமட்டும் இருப்பு கொள்ளாது

பாடங்களையும் சரிவர கவனிக்காது

மீண்டும் என் தேவதையின்

பின்னால் அன்னநடை

குறித்த வீதி வந்ததும்

மீண்டுமொரு ஓரப்பார்வை

போதும் எனக்கு.. அன்றைய பொழுதுக்கு..

மீண்டும் நாளைக்கு......

என்பயணம் அவள் பின்னால் தொடரும்...

Thursday 18 March 2010

உன்னால் கிடைத்த பதில் சரிதானா?

வாசம் வீசும் நம் உறவுக்குள்


வேசமின்றி நாசவேலை செய்தது யார்?

பாசம் வைத்து சிலர் பழகி

மோசம் செய்ததும் சரிதானா?

மறைவு எதுவும் எமக்கில்லை என்று

இறுமாந்திருந்த எனக்கு

உன்னால் கிடைத்த பதில் சரிதானா?

வாழ்வில் ஒரு தடவை.

நிகழும் மகிழ்வான நிகழ்வு பற்றி

எனக்கு சொல்ல மறந்ததும் சரிதானா?

உயிர்த்தோழன் என்று உரக்க

நான் கூறியது வலுவிழந்து போனதே....

நம்மை பிரிக்க பலர் நினைத்த போது

பிழறாமல் நின்றவனே- இன்று

தொலைதூரத்தில் நான் இருக்க

மனு ஏதும் கொடுக்காமல்

பிரிவெளுதியது நியாயம் தானா?

கண்களில் கண்ணீர் அருவியென பாய

வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக

கோபம் தணித்து உனை எதிர்பார்த்து

சோகத்தோடு காத்திருக்கின்றேன்





கஸ்ரோ

Saturday 23 January 2010

என்றும் அழிக்கப்போவதில்லை

நீ வர மாட்டாய் என்று தெரிந்தும்,



எனக்கான உன் இதயம்


இடம் மாறிசென்றது தெளிவாக தெரிந்தும்....


இதயத்தில் எழுதிய உன்னை






என்றும் அழிக்கப்போவதில்லை...............


.


காதல்????????????????????????/

காதல் எனும் வான வெளி


மப்பும் மந்தாரமுமாய் இருந்து

வசந்தம் கொண்டாடிய கணங்களில்

கையில் ஒரு குட்டி பொம்மையுடன்

மனதில் என்னையும் கொண்டு உறங்கினாய்

காதல் எனும் வானவெளி

வரட்சியில் வாடி வதங்கிய போது

அருகில் மூன்று உயிர் பொம்மைகளுடன்

நீ ஆனந்தமாக உறங்குகின்றாய்.....

உன் மனசில்,,

Friday 15 January 2010

நட்புகள்

ஆண்டுகள் சில சென்றால்

அன்பான முகங்கள் மறக்குமோ....

நாடு விட்டு நாடு சென்றால்

நட்புகள் தான் பிரிவெழுதுமோ....

நம்பிக்கையின் அஸ்திவாரங்கள்-இன்று

ஆட்டம் காணுமோ.......?நான் செய்த பிழை எதுவோ....

எனக்கெதுவும் புரியலையே...!!!

K.P.castro

Monday 28 December 2009


காதல் எனும் வான வெளி

மப்பும் மந்தாரமுமாய் இருந்து

வசந்தம் கொண்டாடிய கணங்களில்

கையில் ஒரு குட்டி பொம்மையுடன்

மனதில் என்னையும் கொண்டு உறங்கினாய்

காதல் எனும் வானவெளி

வரட்சியில் வாடி வதங்கிய போது

அருகில் மூன்று உயிர் பொம்மைகளுடன்

நீ ஆனந்தமாக உறங்குகின்றாய்.....

உன் மனசில்,,..................

Thursday 24 December 2009

நடந்தது நன்றாகவே நடந்தது......

படிப்பதிட்கு அவள் வேம்படி சென்றபோது
இடி இடித்தது என் உச்சந்தலையில்
வெட்டியாய் திரியும் காலிப்பயல்களை நினைத்து.....
வெண்சட்டை உடுத்தி அவள் சென்றபோது
ஆசைபட்டேன் அவள் கழுத்துபட்டியாக.......
தம்பர் மண்டபத்தில் இருந்து எட்டி பார்த்தபோது
தேவதையின் தரிசனம் கிடைக்காததால்
தம்மடிக்க தொடங்கினேன் தனிமையில்..
"பிக் மச்" இட்காவது வந்திருப்பாள் என்று
சற்றே எட்டி பார்த்த போது....
பத்திரிசியார் மைதானத்தில் அவளை...
கண்டதாக சிலர் கூறினார்,,,,,
உனை நினைத்த நேரத்தில்.............
உனக்காக களித்த பொழுதில்...........
எனக்காக எத்தனையோ கருமங்களை
ஆற்றியிருந்தால்...எதாவது நடந்திருக்கும்...
நல்லது........................
நடந்தது நன்றாகவே நடந்தது......

கஸ்ரோ...........

Sunday 29 November 2009

பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும் பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும் ........

பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும்
இதுதாண்டா உன் ஜோடின்னு மனசு சொல்லணும்
இதயத்தில் ஏறி உட்கார்ந்து எனை இம்சிக்கணும்
தூக்கம்கெட்டு அவள் நினைவுகள் எனை வறுதெடுக்கணும்
அவள் நினைவோடேயே மனசு அலையணும்
மறுபடி எப்போ பார்ப்பேன்னு எம்மனசு தவிக்கனும்
இந்த சின்ன ஆசைகள் எல்லாம் ஒரு பொழுது
கேள்விகளையும் பதில் அற்றவைகளாகவும் இருந்தன.....

முதற் பார்வையிலேயே பிடித்தது
உன் ஜோடின்னு மனசு சொன்னது
உன் நினைவுகள் எனை இம்சித்தன
அலை பாய்ந்த என் மனசு
உன்னை நினைத்து தினமும் ஏங்கியது
உன்னை பார்த்த பின்பு இவை எல்லாம் நிகழ்ந்தது
thodarum..

Saturday 21 November 2009

ஒரு சந்திப்பு...........

ஒரு சந்திப்பு...........
இனியவை, உங்கள் மனதிற்கு இனியவை நினைக்க நினைக்க இக்கணமும் இனிப்பவை, எண்ணும் போதெல்லாம் மனதில் ஒரு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உண்டு பண்ணுபவை எவை என்று கேட்டால் ஓராயிரம் காரணங்களை சுட்டிக்காட்டுவீர்கள் முதற் காதல் தொடக்கி முதலிரவு வரைக்கும் அசை போடுவீர்கள்... ஆனால் பிரிந்து சென்ற நண்பர்களின் தொடர்பு, உருவம் மாறுகின்ற வயதில் பிரிக்கப்பட்டு ஆள் அடையாளமே 100 வீதம் மாறி போயிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் 14 வருடங்கள் கழித்து அந்நிய மண் ஒன்றில் என்னை அடையாளம் கண்டு ஆரத்தழுவிய அந்த கணப்பொழுது என்னை கண்டு கொண்ட போது அவன் அடைந்த ஆனந்தம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களை ஒன்றாகி விட்டது... ஆயிரத்து தொள்ளயிரத்து தொண்ணூற்று ஐந்து ஜப்பசி பிரிந்த நாங்கள் 2009 நவம்பர் இல் சந்தித்தோம் ... அந்த நண்பனின் பெயர் கோகிலன் ..........................

Monday 16 November 2009


வாடிப் போவதின் வேதனை பற்றி
மடிந்து போகும் பூக்களிடம்
கேட்காதீர்கள்...............
என் காதலிடம் உரத்து கேளுங்கள்..
மொட்டு நிலையிலிருந்தே கூறும்...
வேதனையின் சோகம் பற்றி...

கஸ்ரோ

Saturday 14 November 2009