Pages

Saturday 14 November 2009

வந்தேன் உனக்காக


பூச்செண்டு கொண்டு வந்தேன்

பூந்தளிரே உனக்காக

பூரிப்புடன் வாங்கி வைத்து

புறமுதுகு காட்டி சென்றாயே...


மாலை கொண்டு வந்தேன்

மாங்கிளியே உனக்காக

மனமகிழ்ந்து சூடினாயே - இன்று

மலர் பாடை கட்டினாயே எனக்கு...


பால் பழமும் கொண்டு வந்தேன்

பசும் மானே உனக்காக

பாங்குடனே அருந்தி விட்டு

பாதை மாறி சென்றாயே.....


இன்னிசை கீதம் இசைத்து வந்தேன்

இசைகுயிலே உனக்காக இசை கேட்டு

இசையோடு வாழ்ந்து

இழவு காத்த கிளியக்கினாயே இன்று...


கஸ்ரோ

No comments: