காதல் எனும் மைதானத்தில்
களிப்புடன் விளையாடவே கனவு கண்டேன்
நானும் நீயுமே வீரர்களாய் இங்கு
நடுவர் ஏதும் நமக்கில்லை எங்கும்
தவறாய் ஆட்டத்தை ஆடியதும் நீதான்...
தடுத்து நிறுத்தி போதும் என்ற என்னை
உதைத்து வீழ்த்தியதும் நீதான்...
அன்பே..................
சிவப்பு அட்டை காட்டியதும் நீதான்
எப்படி இது நியாயம் .................??
மேன்முறையீட்டு மனுவும் செய்தேன்
நீதியின்றி உன்னால் நிராகரிக்கவும் பட்டேன்
நடுவர் பார்வையாளர் அற்ற மைதானத்தில்
மூன்றாம் நடுவரையும் நீதான்...
எப்படி இது நியாயம் அன்பே.........?
கஸ்ரோ
No comments:
Post a Comment