Pages

Monday, 28 December 2009


காதல் எனும் வான வெளி

மப்பும் மந்தாரமுமாய் இருந்து

வசந்தம் கொண்டாடிய கணங்களில்

கையில் ஒரு குட்டி பொம்மையுடன்

மனதில் என்னையும் கொண்டு உறங்கினாய்

காதல் எனும் வானவெளி

வரட்சியில் வாடி வதங்கிய போது

அருகில் மூன்று உயிர் பொம்மைகளுடன்

நீ ஆனந்தமாக உறங்குகின்றாய்.....

உன் மனசில்,,..................

Thursday, 24 December 2009

நடந்தது நன்றாகவே நடந்தது......

படிப்பதிட்கு அவள் வேம்படி சென்றபோது
இடி இடித்தது என் உச்சந்தலையில்
வெட்டியாய் திரியும் காலிப்பயல்களை நினைத்து.....
வெண்சட்டை உடுத்தி அவள் சென்றபோது
ஆசைபட்டேன் அவள் கழுத்துபட்டியாக.......
தம்பர் மண்டபத்தில் இருந்து எட்டி பார்த்தபோது
தேவதையின் தரிசனம் கிடைக்காததால்
தம்மடிக்க தொடங்கினேன் தனிமையில்..
"பிக் மச்" இட்காவது வந்திருப்பாள் என்று
சற்றே எட்டி பார்த்த போது....
பத்திரிசியார் மைதானத்தில் அவளை...
கண்டதாக சிலர் கூறினார்,,,,,
உனை நினைத்த நேரத்தில்.............
உனக்காக களித்த பொழுதில்...........
எனக்காக எத்தனையோ கருமங்களை
ஆற்றியிருந்தால்...எதாவது நடந்திருக்கும்...
நல்லது........................
நடந்தது நன்றாகவே நடந்தது......

கஸ்ரோ...........